வடக்கிலே இருந்து இரவோடு இரவாக விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள்! சபையில் கொதித்தெழுந்த எம்.பி (Video)
வடக்கு, கிழக்கு இணைப்பிற்கு பின்னர் இந்த நாட்டிலே பாரிய இனச்சுத்திகரிப்பு வடகிழக்கிலே ஏற்பட்டது என்று சொன்னால் அதனை யாரும் மறுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து நேற்றைய தினம் (09.08.2023) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், வடக்கிலே இருந்து இரவோடு இரவாக 24 மணித்தியாலத்திற்குள் 95,000 முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்ட வரலாற்றை ஒரு போதும் மறந்து விட்டு நாங்கள் இப்போது பேச முடியாது.
முஸ்லிம்கள் தொழுதுகொண்டிருந்த போது கொல்லப்பட்ட வரலாறுகளையும், கிராமங்களிலே துப்பாக்கிகள் இல்லாமல் வெறும் கத்திகளால் கொல்லப்பட்ட வரலாறுகளையும் நாங்கள் பேசாமல் 13ஆவது திருத்தத்தை பற்றி பேச முடியாது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒரு நிரந்தர தீர்வாக இல்லாமல் இருப்பதற்கு இந்த நாட்டிலே முஸ்லிம்களுடைய அடிப்படை இனப் பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டது தான் காரணம் என்று நான் ஆணித்தரமாக இவ்விடத்தில் கூறி வைக்க விரும்புகிறேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 17 மணி நேரம் முன்
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan
இது மட்டும் நடந்தால் கதையே மாறிடும்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகர் கதை பற்ற போட்ட பதிவு வைரல் Cineulagam