அநுர குமாரவுடன் கைகோர்க்கும் முஸ்லிம் அரசியலை மையப்படுத்திய தேசிய கட்சி - செய்திகளின் தொகுப்பு
முஸ்லிம் அரசியலில் கடந்த காலங்களில் விடப்பட்ட தவறுகளை அடையாளம் கண்டு அதற்கான தீர்வுகளை முன்வைத்து தேசிய மக்கள் சக்தியின் ஒப்புதலை புரிந்துணர்வு ஒப்பந்தம் ஊடாக பெற்றுக்கொண்டதன் பின்னரே இந்த அரசியல் இணைவு இடம்பெறவுள்ளதாக அறியமுடிகின்றது.
இந்நிலையில், இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவுற்றுள்ளதாகவும் அந்தக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பேச்சுவார்தை வெற்றியடைந்தால் தேசிய மக்கள் சக்தியின் பாரிய பொதுக் கூட்டம் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவுள்ளதாகவும் அதிலிருந்து அரசியற் பணிகளை வீரியமாக கொண்டு செல்லவுள்ளதாகவும் அந்த முக்கியஸ்தர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசியலில் நடக்கப்போவது என்ன என்பதனை இந்தியாவின் றோ அனுமானித்துள்ளது. அதனாலே அநுரகுமார திசாநாயக்காவின் இந்தியா விஜயமும் அமைந்திருந்தது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |