புனித குர்ஆன் தமிழ் பிரதிகளை விடுவிக்குமாறு முஸ்லிம் அமைச்சர்கள் கோரிக்கை
இலங்கை சுங்கத்துறையால் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள புனித குர்ஆன் (தமிழ் மொழிபெயர்ப்பு) தொகுதியை உடனடியாக விடுவிக்க தலையிடுமாறு அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி உட்பட அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மத விவகார அமைச்சர் ஹினிதுமா சுனில் செனவியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது அடிப்படை உரிமைகளை மீறுவதாக அவர்கள் எச்சரித்துள்ளதுடன் மத விவகார அமைச்சருக்கு ஒரு கடிதம் மூலம் இது தொடர்பான கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கடிதத்தில், மத விவகார துணை அமைச்சர் முனீர் முலாஃபர் உட்பட அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
கடிதம் அனுப்பி வைப்பு..
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரின் தலையீட்டைத் தொடர்ந்து, புனித குர்ஆன் பிரதிகளின் ஒரு தொகுதி, இலங்கை சுங்கத்துறையால் கடந்த ஆண்டு மே 16, 2024 அன்று சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புனித குர்ஆனின் இந்த தொகுதி (தமிழ் மொழிபெயர்ப்பு) சவுதி அரேபியாவின் கிங் ஃபஹத் குளோரியஸ் குர்ஆன் அச்சிடும் வளாகத்தால் அச்சிடப்பட்டது.
இந்த நிலையில், புனித குர்ஆனை தவறாகவும் சட்டவிரோதமாகவும் தொடர்ந்து தடுத்து வைப்பது இலங்கை அரசியலமைப்பின் மூன்றாம் அத்தியாயத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள இலங்கை முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
துபாயில் ICU-வில் தாய்: இந்தியா வர ரூ 50 லட்சம் கேட்கும் ஏர் ஆம்புலன்ஸ்: தவிக்கும் தமிழர் News Lankasri