ஆப்கானிஸ்தானில் இடம்பெற்று வரும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருமாறு முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்று வரும் வன்முறைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பேண்தகு கௌரவமான சமாதானம் நிலை நாட்டப்படுவதற்கு அனைத்து தரப்பினரும் முனைப்பு காட்ட வேண்டுமென கோரியுள்ளது.
ஆப்கானிஸ்தான் முரண்பாடுகளில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் வன்முறைகளை தவிர்த்துக் கொள்ள வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் சூழ்நிலைகள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசியல் வன்முறைகள் காரணமாக பாரியளவில் உயிர்ச் சேதங்களை சந்தித்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் மற்றும் தாக்குதல்களை நிபந்தனையற்ற ரீதியில் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது.
நம்பிக்கையை கட்டியெழுப்பக் கூடிய வகையில் பரஸ்பர புரிந்துணர்வுடன் சமாதான முனைப்புக்களை அனைத்து தரப்பினரும் முன்னெடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
இலங்கை அருகே... ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கியால் தாக்குதல் நடத்தியதை அறிவித்த அமெரிக்கா News Lankasri