பாலியல் துர்நடத்தை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் மதகுரு..! பொலிசாரின் அறிக்கைக்கு மறுப்பு
அம்பாறை பிரதேசத்தில் பாலியல் துர்நடத்தைக்கு குற்றச்சாட்டில் முஸ்லிம் மதகுரு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் விடுத்துள்ள அறிக்கைக்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா (ACJU) அது தொடர்பான மறுப்பு அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
14 வயது சிறுமி
அம்பாறை, இறக்காமம் பிரதேசத்தில் 14 வயது சிறுமியை பாலியல் துர்நடத்தை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் ஒரு மௌலவி (முஸ்லிம் மதகுரு) என்று பொலிசார் விடுத்துள்ள அறிக்கை தவறானது என அகில இலங்கை ஜம்ய்யத்துல் உலமாவின் (ACJU) இறக்காமம் கிளை மறுத்துள்ளது.
குறித்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அந்த நபர் சான்றளிக்கப்பட்ட மௌலவியோ, எந்தவொரு அரபுக் கல்லூரியிலும் கற்றவரோ கிடையாது. குறிப்பிட்ட அந்த நபர் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாக (ACJU) அல்லது அதன் இறக்காமம் கிளையில் உறுப்பினராகவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 14 வயது சிறுமியை கடுமையான பாலியல் துர்நடத்தை செய்த சம்பவம் தொடர்பாக, இறக்காமத்தில் வசிக்கும் 21 வயது மௌலவி ஒருவர் கைது செய்யப்பட்டதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்திருந்தது.
மறுப்பறிக்கை
சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான மௌலவி, அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றிருந்ததாகவும், பின்னர் கடந்த மே மாதம் 20 ம் திகதியன்று ஒரு வழக்கறிஞர் மூலம் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்ததாகவும் பொலிஸ் திணைக்கள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த அறிக்கை தொடர்பாகவே அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா (ACJU) மேற்குறித்த மறுப்பறிக்கையை வெளியிட்டுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri