இந்திய - பாகிஸ்தான் வெறுப்புணர்வை வென்ற இசை நிகழ்ச்சி! இந்தியாவில் பலத்த வரவேற்பு
மொழி, மதம், தேசியம் என்ற தடைகளைத் தகர்த்தெறிந்து இதயத்தைத் தொடும் பாடல் நிகழ்ச்சி ஒன்றை பாகிஸ்தானின் கலையகம் ஒன்று தயாரித்துள்ளது.
இது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான விரோதத்தை தணிக்கும் வகையில் அமைந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் இசை குழு
குலாம் அலி மற்றும் அபிதா பர்வீன் போன்ற பழம்பெரும் பாகிஸ்தானிய பாடகர்கள் பாடிய இந்த பாடலை மில்லியன் கணக்கான இந்தியர்கள் முனுமுனுக்கிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை, இரு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் இசை மற்றும் திரைப்படத் திட்டங்களில் அடிக்கடி ஒத்துழைத்தனர்.
ஆனால் அரசியல் விரோதங்கள் கலாசார அரங்கில் இடம்பெயர்ந்தபோது, இந்திய பொலிவூட் பாகிஸ்தான் நடிகர்களை கைவிட்டது
அத்துடன் பாகிஸ்தான் இந்திய திரைப்படங்களுக்கு தடை விதித்தது. இந்தநிலையிலேயே புதிய பாடல் நிகழ்ச்சி அமைந்துள்ளது.