கிவுல் ஓயா திட்டத்தை முற்றாக எதிர்க்கும் வகையில் கூட்டணியாக செயற்பட தீர்மானம்
தமிழ் கட்சிகள் ஒருமித்து, ஐக்கியமாக செயல்பட்டால் இழந்த உரிமைகளை மீட்டு பெற முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இன்று(05-02-2026) அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கிவுல் ஓயா திட்டம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் தமிழர்களின் நிலங்களை அபகரிக்கும் நோக்கத்துடனும், சிங்களக் குடியேற்றங்கள் கொண்டு வரும் நோக்கத்துடனும் ஜே.ஆர். ஜெயவர்த்தனா காலத்தில் கிபுல்ஓயா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கிடையிலான நில ரீதியான தொடர்புகளை அறுக்கவும், சிங்கள குடியேற்றங்களின் மூலம் தமிழர்களின் இன விகிதாசாரத்தை குறைக்கவும் இந்த நீண்டகாலத் திட்டம் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது ஜே.ஆர். ஜெயவர்த்தனாவைத் தொடர்ந்து, பிரேமதாச, டி.பி. விஜயதுங்க, சந்திரிகா, மஹிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால் சிறிசேன தலைமையில், தற்போது அநுர அரசு காலத்திற்கும் தொடரப்படுகிறது.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த அந்த காலத்தில் அதிகாரத்தில் இருந்தவர்கள் சிறிய அளவிலான முயற்சிகளை மேற்கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக, இன்று இந்த திட்டத்தின் மூலம் உட்கட்டமைப்பு, குடிநீர் வசதி, காணி போன்ற பல்வேறு திட்டங்களை அமல்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சிவஞானம் சிறீதரன் கூறியது பொய்யான குற்றச்சாட்டு
குறிப்பாக, 4000 ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டு நீர்ப்பாசன திட்டங்கள் உருவாக்கப்பட்டு, சிங்கள குடியேற்றங்களை நிறுவ இன்றைய ஆட்சி செயல்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எனக்கு சிங்கள மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கியதாக செய்திகள் வெளியிட்டுள்ளனர்.
நான் அதனை முழுமையாக மறுக்கிறேன், அது அப்பட்டமான கருத்தாகும் என்றும், அவரது காழ்புணர்ச்சியின் வெளிப்பாடாகவே நான் பார்க்கிறேன்.

ஆரம்பத்திலேயே நாடாளுமன்ற உரைகளில் இந்த விடயங்களை பேசியும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தேன். சிறிய வயதிலேயே இந்த பிரதேசத்தில் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு, தமிழரின் உரிமைகள் மீட்க போராடியுள்ளேன்.
திருகோணமலையில், எனது அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டபோதும், நான் எந்த ஆட்சியிலும் சிங்கள குடியேற்றத்திற்கு ஆதரவு தெரிவித்ததாக இல்லை. ஆனால், அந்த அரசாங்கங்களை பயன்படுத்தி அபிவிருத்திகளை முன்னெடுக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம்.
நாங்கள் ஒருமித்து, தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடும் கட்சியின் அடிப்படையில், சிறுபான்மை கட்சிகளுடன் இணைந்து செயல்படுகிறோம்.
தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்படும் அனைத்து ஒடுக்குமுறைகளையும், தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால், இழந்த உரிமைகளை மீட்டு பெற முடியும் என வலியுறுத்தியுள்ளார்.
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 2 நாட்கள் முன்
18 ஆண்டுக்கு பின் செவ்வாய்-ராகுவால் உருவாக்கும் அங்காரகயோகம்! டபுள் ஜாக்பாட் பெறும் 3 ராசிகள் Manithan
சன் டிவி சீரியல்களின் நேரம் மாற்றம்.. சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, எதிர்நீச்சல் ஒளிபரப்பு எப்போது தெரியுமா? Cineulagam