தந்தை - மகன் படுகொலை:சகோதரர்கள் இருவர் கைது!
வீடொன்றில் தந்தை மற்றும் மகன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
அநுராதபுரம் - இராஜாங்கனை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலேயே மேற்படி இருவரும் இராஜாங்கனைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய தந்தையும், 26 வயதுடைய மகனுமே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 27 மற்றும் 23 வயதுடைய இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட தந்தையும் மகனும் பல ஆண்டுகளுக்கு முன்னர் சந்தேகநபர்களின் தந்தையைத் தாக்கி கொலை செய்துள்ளனர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இராஜாங்கனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது? News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ள ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம் News Lankasri
