வெளிநாடொன்றில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்
சீசெல்ஸில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சீஷெல்ஸின் லாடிகு தீவில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய 47 வயதுடைய இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையைச் சேர்ந்த நபர் கடந்த டிசம்பர் மாதம் 10ஆம் திகதி அவரது வீட்டில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
பல நாட்களாக சேவைக்கு வருகைத்தராமையினால் இலங்கையர் பணியாற்றிய நிறுவனத்தின் அதிகாரி, அவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். இதன் போது அவர் தனது அறையில் விழுந்து கிடப்பதனை அவதானித்த அதிகாரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன் பின்னர் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த நபரின் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதற்கமைய குறித்த இலங்கையரின் கொலை தொடர்பில் அந்தநாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், இதுவரையில் சந்தேக நபர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.