கர்நாடகாவில் 1400 கோடி ரூபாவினை முதலீடு செய்துள்ள முத்தையா முரளிதரன்
இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் 1400 கோடி இந்திய ரூபா பணத்தினை முதலீடு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மென்பான உற்பத்தி நிறுவனமொன்றினை நிறுவும் நோக்கில் இவ்வாறு முதலீடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கர்நாடகாவின் பாடானாகுப்பியின் சமாராஜனாகரா மாவட்டத்தில் இந்த உற்பத்திச்சாலை நிறுவப்படுவதாக கூறப்படுகின்றது.
முரளிதரனுடன் பேச்சுவார்த்தை
கர்நாடகாவின் சிறு மற்றும் பாரிய கைத்தொழிற்துறை அமைச்சர் எம்.பி. பாடீல் இந்த விடயத்தை இந்திய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் குறித்து முரளிதரனுடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறியுள்ளார்.
முத்தையா மென்பானம் மற்றும் இனிப்புப் பண்டங்கள் என்ற பண்டக்குறியின் பெயரில் இந்த உற்பத்திச்சாலையின் உற்பத்திகள் உற்பத்தி செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இந்த உற்பத்திச்சாலை 230 கோடி ரூபா முதலீட்டில் முன்னெடுக்கப்பட இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உற்பத்திச்சாலையின் உற்பத்திகள்
தற்பொழுது முதலீடு ஆயிரம் கோடி ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், சில ஆண்டுகளில் இந்த முதலீட்டுத் தொகை ஆயிரத்து நாநூறு கோடியாக உயர்வடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதமளவில் இந்த உற்பத்திச்சாலையின் உற்பத்திகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒதுக்கப்பட்ட காணி தொடர்பிலான சிறு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு தாம் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியதாக அமைச்சர் பாடீல் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![தனது மகளின் திருமணத்திற்கு நடிகர் அர்ஜுன் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?... பிரபலம் கூறிய தகவல்](https://cdn.ibcstack.com/article/dade5c94-21d2-43e1-9b1f-e4dd35c0a1ca/24-6670307d8482a-sm.webp)
தனது மகளின் திருமணத்திற்கு நடிகர் அர்ஜுன் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?... பிரபலம் கூறிய தகவல் Cineulagam
![4 நாட்கள் அடிமை போல் வெச்சிருந்தாங்க.. நீண்ட நாட்களுக்கு பிறகு மனம் விட்டு பேசிய GV பிரகாஷ்](https://cdn.ibcstack.com/article/67ad2286-b30b-4b42-8771-05b715e1027e/24-66712da7a2f65-sm.webp)
4 நாட்கள் அடிமை போல் வெச்சிருந்தாங்க.. நீண்ட நாட்களுக்கு பிறகு மனம் விட்டு பேசிய GV பிரகாஷ் Manithan
![மூன்றாம் உலகப்போருக்கு இந்திய ஜோதிடர் குறித்த நாள் இன்றுதான்... போர் வெடித்தால் என்ன செய்வது?](https://cdn.ibcstack.com/article/c51b7053-61dd-46fa-9c38-becda1330e5e/24-6671163d775ad-sm.webp)
மூன்றாம் உலகப்போருக்கு இந்திய ஜோதிடர் குறித்த நாள் இன்றுதான்... போர் வெடித்தால் என்ன செய்வது? News Lankasri
![நடிகை அமலாபாலுக்கு குழந்தை பிறந்துவிட்டது, குழந்தை வீடியோ வெளியிட்ட பிரபலம்.... கியூட் பதிவு](https://cdn.ibcstack.com/article/d5816dfe-531d-4c7f-b670-67f07698ae2c/24-667044c4c465a-sm.webp)
நடிகை அமலாபாலுக்கு குழந்தை பிறந்துவிட்டது, குழந்தை வீடியோ வெளியிட்ட பிரபலம்.... கியூட் பதிவு Cineulagam
![மூன்றாம் உலகப்போரின் முதல் மூன்று மணி நேரம் இப்படித்தான் இருக்கும்: திகில் கிளப்பும் Gemini AI](https://cdn.ibcstack.com/article/891a07de-4b84-43ef-8a4a-8e39bc2686ba/24-667171b4d4430-sm.webp)