திருகோணமலையில் கிழக்கு ஆளுநரினால் பல்நோக்கு மத்திய நிலையம் திறந்து வைப்பு
திருகோணமலை(Trincomalee) - பெரியாற்று முனை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு மத்திய நிலையம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால்(Senthil Thondaman) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு கிண்ணியா நகர சபையின் செயலாளர் தலைமையில் இன்று(15.06.2024) இடம்பெற்றுள்ளது.
திறப்பு விழா
இதன்போது, கிழக்கு ஆளுநரினால் குறித்த வளாகத்தில் மரநடுகையும் இடம்பெற்றுள்ளது.
மேலும், இந்நிகழ்வில் உள்ளூராட்சி உதவி ஆணையாளர், கிண்ணியா நகர சபையின் முன்னாள் தவிசாளர்களான சட்டத்தரணி ஹில்மி மகரூப், எஸ்.எச்.எம். நளீம், முன்னாள் உறுப்பினர்களான எம்.எம். மஹ்தி, எம்.ஏ. கலிபத்துல்லா, எம்.எச்.எம். ராபி ஆகியோரும், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி, குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி, உலமா சபை தலைவர், சனசமூக அபிவிருத்தி அங்கத்தவர்கள், பெண்கள் அமைப்புக்கள், மற்றும் நகர சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் என பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
