மட்டக்களப்பில் ஒரே இரவில் பல வீடுகளில் கொள்ளை
மட்டக்களப்பு மண்டூர் பிரதேசத்தில் ஒரே இரவில் 8 வீடுகளை உடைத்து 60 பவுண் தங்க ஆபரணங்கள் திருடிச் செல்லப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம், நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) இரவு இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ தினமன்று வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மண்டூர் முதலாம் பிரிவிலுள்ள பிரதேசத்தில் வழமைபோல வீடுகளை பூட்டிவிட்டு அப்பகுதி மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணை
இந்தநிலையில், அந்த பகுதியில் உள்ள 8 வீடுகளின் யன்னல் கதவு, மற்றும் சமையலறை யன்னல் கதவுகளை உடைத்து வீடுகளுக்குள் உள்நுழைந்த திருடர்கள் அலுமாரிகளை சோதனையிட்டு இரண்டு வீடுகளில் 60 பவுண் தங்க ஆபரணங்களை திருடியுள்ளனர்.

ஏனைய வீடுகளில் எந்த விமதமான பொருட்களும் கிடைக்காததால் அங்கிருந்து அவர்கள் திரும்பி சென்றுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அங்கு மோப்ப நாய்களுடன் தடயவியல் பிரிவு பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri