வீதியெங்கும் மரண ஓலம்! உயிர் விலை கொடுத்த கந்தக பூமி
தாயகம் கோரிய உரிமைப் போராட்டம் மௌனிக்கப்பட்டு 15 வருடங்கள். இந்த 15 வருடங்களும் கொடுத்த ரணங்களும், வடுக்களும் மிக அதிகம்.
யுத்தத்தின் இறுதி நாட்களில் தமிழினம் பட்ட துயரங்கள் சொல்லிலடங்காதவை.
உண்ண உணவோ, இருக்க இடமோ இன்றி அல்லலுற்ற உறவுகள் ஒருபுறம், குண்டுகளால் சிதைக்கப்பட்டு உறவுகளைத் தேடித் திரிந்த உறவுகள் ஒருபுறம் என்று விபரிக்க முடியாது துயர அனுபவங்களை அந்த இறுதி நாட்கள் கொடுத்திருந்தன.
முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி தருணங்களை நினைவுகூரும் பொருட்டு எம் தாயகப் பகுதிகளில் இன்றும் பல்வேறு எதிர்ப்புக்களுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், தமிழர் தாயகம் கண்ட துயரங்களை மீண்டுமொரு முறை உணர்வுபூர்வமாக மீட்டிப்பார்க்கும் தருணம் இது,
வரிகள் - ராஜூகரன்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Box office: 17 நாட்களில் பிளாஸ்ட் திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா, முழு விவரம் இதோ Cineulagam