முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: இனபேதமின்றி இணைந்த மக்கள் - செய்திகளின் தொகுப்பு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கொழும்பு காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் இடம்பெறுகின்றது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழர்களுடன் சிங்கள மக்களும் பங்கேற்றுள்ளனர்.
அந்த வகையில், இலங்கை வரலாற்றில் முதல் முறையாகத் தென்னிலங்கையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நினைவேந்தல் கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கமவில் தற்போது இடம்பெற்று வருகின்றது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,