முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வவுனியாவில் அஞ்சலி
முள்ளிவாய்கால் 15ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வவுனியா (Vavuniya), பண்டாரிக்குளத்தில்
முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள இளைஞர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் பலர் இணைந்து கஞ்சியை பண்டாரிக்குளம் பிரதான வீதியில் வைத்து இன்று (18.05.2024) வழங்கி வைத்துள்ளனர்.
அடுத்த தலைமுறை
2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது மக்கள் முள்ளிவாய்கால் கஞ்சியினை உணவாக உட்கொண்டே உயிர் பிழைத்துள்ளனர்.
இதன் 15 ஆவது ஆண்டினை நினைவு கூர்ந்தும், அடுத்த தலைமுறைக்கு வரலாற்றை கடத்தும் நோக்குடன் இவ்வாறு கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வீதியால் சென்ற பலரும் அதனை வாங்கி பருகிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், வவுனியா குருமண் காடு காளி கோயில் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில் விசேட ஆத்மசாந்தி பூசையும் பிரார்த்தனையும் இடம்பெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? News Lankasri
