தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு (photos)
மக்கள் பங்களிப்புடன் மன்னாரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் நடைபெற்றுள்ளது.
மன்னார் மாவட்ட வைத்தியசாலை முன்பாக இன்று (11.05.2023) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் செயற்றிட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மன்னாரில் உள்ள வர்த்தக நிலையங்கள் வீடுகளிற்கு சென்று அரிசி விறகு என்பன திரட்டப்பட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி ஆக்கப்பெற்று பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
இனப்படுகொலை இடம்பெற்றவேளை மக்களின் அடிப்படை ஆதாரமாக காணப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி தொடர்பான துண்டுபிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.
அதிகளவான மக்கள் உணர்வுபூர்வமாக கலந்து கஞ்சியை அருந்தி சென்றுள்ளனர்.
தொடர்சியாக வவுனியா மாவட்டத்தில் வவுனியா தமிழ் மகாவித்தியாலயம் முன்பாக மதியம் 12:30 மணிமுதல் கஞ்சி விநியோகம் முன்னெடுக்கபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மருதங்கேணி
இனப் படுகொலை வாரத்தை நினைவு கொள்ளும் வகையில் இன்றைய தினம் (11.05.2023) வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியிலும் உப்பு கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.
வடமராட்சி கிழக்கின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர் இ.முரளிதரன் தலமையில், முன்னணி உறுப்பினர்கள், பிரதேச பிரதேச மக்கள் இணைந்து முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை நினைவு கஞ்சி சமைத்து பரிமாறினர் இதில் மக்கள் ஆர்வத்துடன் கஞ்சியை பெற்று பருகியதை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
செய்தி: எரிமலை
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் இன்று (11.05.2023) முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பொதுமக்களின் பங்களிப்புடன் பெறப்பட்ட அரிசியினை கொண்டு கஞ்சி காய்ச்சப்பட்ட நிலையில் உயிர்நீத்த உறவுகளிற்கு ஈகைச்சுடரேற்றி ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தினரும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி:கஜிந்தன்
















ஈரானை தாக்கிய இஸ்ரேல்... அமெரிக்காவை எச்சரிக்க சுவிஸ் தூதரை அழைத்த ஈரான்: காரணம் என்ன? News Lankasri

விமானம் விழுந்த விடுதியில் 2 வயது பேத்தியுடன் காணாமல் போன தாய்.., கவலையுடன் தேடி அலையும் மகன் News Lankasri
