தனிமைப்படுத்தல் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக செயற்பட்ட முல்லைத்தீவு பெண் கைது
தனிமைப்படுத்தல் நிலையமொன்றில் சந்தேகத்திற்கு இடமான வகையில் செயற்பட்ட முல்லைத்தீவைச் சேர்ந்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வரும் பெண்களுக்காக வியங்கொட நய்வல பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையமொன்றில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.
தனிமைப்படுத்தல் முகாமில் தங்கியிருந்த ஏனைய பெண்களின் தகவல்களை திரட்டி சந்தேகத்திற்கு இடமான முறையில் செயற்பட்ட பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பெண் கடந்த 2019ம் ஆண்டு போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி போலிப் பெயரைப் பயன்படுத்தி சவூதி அரேபியாவிற்கு சென்றுள்ளார் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த பெண் அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
ஆனந்தியை கொலை செய்ய துளசி செய்த அதிர்ச்சி செயல், தப்பிப்பாரா?... சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri