தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்படும் முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள்(VIDEO)

Sri Lankan Tamils Mullaitivu Sri Lanka Sri Lankan Peoples Northern Province of Sri Lanka
By Keethan Oct 05, 2022 01:28 AM GMT
Report

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரி முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகம் நேற்று முன்தினம்(03) கடற்தொழிலாளர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

கடற்தொழிலாளர்களது கோரிக்கைகள் தீர்க்கப்படும் வரை தொடர் போராட்டத்தினை தொடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத மீன்பிடி

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்படும் முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள்(VIDEO) | Mullaitivu Seafarers Who Continue To Struggle

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளனத்தினால் குறித்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்தொழிலாளர்கள் தொடர்ச்சியாக பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எரிபொருள் கிடைக்காத நிலையில் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் தொழிலுக்கு சென்று வருகின்ற போதிலும் கடலில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக கடற்தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டாவது நாளாக போராட்டம்

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்படும் முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள்(VIDEO) | Mullaitivu Seafarers Who Continue To Struggle

முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்தொழிலாளர்கள் கடலில் வளங்கள் சட்டவிரோத தொழில் செய்வபவர்களால் அழிக்கப்படுவரும் நிலையில் தங்களது குடும்பங்கள் கஞ்சி குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கடற்தொழிலாளர்கள் தமது நிலைமையை புரிந்துக்கொள்ளாத அதிகாரிகள் சட்டவிரோத தொழிலுக்கு உடந்தையாகவுள்ள அதிகாரிகள் எமக்கு தேவையில்லை என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த அதிகாரிகளை உடனடியாக முல்லைத்தீவிலிருந்து மாற்றம் செய்து தமக்கான ஒரு தீர்வினை வழங்குமாறு வலியுறுத்தியும் சட்டவிரோத தொழில்களை நிறுத்துமாறு கோரியும் இரண்டாவது நாளாக நேற்று(04.10.2022) போராட்டத்தினை தொடர்ந்துள்ளார்கள்.

கடற்தொழிலாளர்களுடன் கலந்துரையாடல்

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்படும் முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள்(VIDEO) | Mullaitivu Seafarers Who Continue To Struggle

இந்நிலையில் இரண்டாவது நாளான நேற்று கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளின் செயற்பாட்டிற்கு எந்த இடையூறும் விளைவிக்காத வண்ணம் போராட்டத்தினை முன்னெடுத்துள்ள அதேவேளை கடற்தொழிலாளர்கள் எவரும் அலுவலகத்திற்கு செல்வதை தடை செய்துள்ளார்கள்.

கடற்தொழிலாளர்களின் பிரச்சினையினை கேட்டறிந்து கொள்வதற்காக முல்லைத்தீவு மாவட்ட செயலாளரின் சார்பில் மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர்கள் கடற்தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி)சி.குணபாலன் ஆகியோர் போராட்டக்காரர்களை சந்தித்துள்ளார்கள்.

கோரிக்கைகள்

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்படும் முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள்(VIDEO) | Mullaitivu Seafarers Who Continue To Struggle

அரசாங்க அதிபரிடம் கடற்தொழிலாளர்களால் தெரிவிக்கப்பட்ட கோரிக்கையினை கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் தெரியப்படுத்தியுள்ளார்.

கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் தொடர்புகொண்டு தெளிவுபடுத்தியுள்ளார்.

பணிப்பாளர் நாயகம் கடற்தொழிலாளர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி ஏதாவது ஒரு முடிவினை பெற்றுத்தருவதற்கு தயாராக இருப்பதாக அரசாங்க அதிபருக்கு அறிவித்துள்ளார்.

இன்று பாரிய போராட்டம்

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்படும் முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள்(VIDEO) | Mullaitivu Seafarers Who Continue To Struggle

நிர்வாக இடம்மாற்றங்கள் தொடர்பில் பணிப்பாளர் நாயகத்தினாலோ அல்லது அரசாங்க அதிபராலோ உடனடியாக செய்ய முடியாது.

ஒரு இடமாற்றம் செய்ய வேண்டுமாக இருந்தால் பொதுச்சேவை ஆணைக்குழு தான் தீர்மானிக்கும் என்றும் அவர் போராட்டகாரர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் அதிகாரிகளை மாற்றும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளதுடன் இன்று காலை போராட்டகாரர்கள் தங்கள் குடும்பங்கள் பிள்ளைகளுடன் வந்து பாரிய போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US