முல்லைத்தீவில் அதிபர் நியமனம் கோரி மாணவர்கள் - பெற்றோர்கள் போராட்டம்

Ministry of Education Government Of Sri Lanka Sri Lankan Schools
By Keethan Jul 01, 2025 10:31 PM GMT
Report

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட முல்லை கல்விவலயத்தின் கீழ் உள்ள மாத்தளன் றோமன் கத்தோலிக்க அரசினர் தமிழ் கலைவன் பாடசாலைக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக அதிபர் இல்லாத நிலையினால் அதிபரை உடனடியாக நியமிக்க கோரி பெற்றோர்கள், மாணவர்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

குறித்த போராட்டம், நேற்று (01.07.25) காலை பாடசாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது, "அந்த ஆரம்ப பாடசாலைக்கு கடந்த ஆண்டு 11ஆம் மாதம் தொடக்கம் அதிபருக்கான வெற்றிடம் காணப்படுகின்றது. இது தொடர்பில் பெற்றோர்கள் வலய கல்வி அலுவலகத்திற்கு சென்று இந்த கோரிக்கையினை முன்வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் வடமாகாண ஆளுனரிடம் அதிபரை நியமிக்க கோரிக்கை முன்வைத்தபோதும் அவர் இரண்டு வாரங்களில் பாடசாலைக்கு அதிபரினை நியமிப்பதாக தெரிவித்து இன்று நான்கு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் எந்த முடிவும் இல்லாத நிலை காணப்படுகின்றது.

பலமுறை முறைப்பாடு 

இந்த நிலையில் முல்லை கல்வி வலயத்திணைக்களத்திற்கும் இது தொடர்பில் முறையிட்ட போது அவர்கள் பாடசாலையில் இரண்டாம் தவணை பரீட்சைமுடிய அதிபரை நியமிப்பதாக சொன்னார்கள் பரீட்சை முடிந்த பின்னர் வலயத்தினை தொடர்பு கொண்டு கேட்டபோது இப்போது தேர்தல் நடக்கின்றது.

தேர்தல் முடிய அதிபரை நியமிப்பதாக சொன்னார்கள் தேர்தல் முடிந்து இதுவரை அதிபர் எவரும் நியமிக்கப்படவில்லை முல்லை வலயக்கல்லி திணைக்களம் ஆனந்தபுரத்தில் உள்ள அதிபர் ஒருவரை (முல்லைத்தீவு பாடசாலை ஒன்றில் கடமையாற்றும்) மாத்தளன் பாடசாலைக்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளமையினை கடந்த 19.02.2025 அன்று வலயத்தில் இருந்து மாகாணத்திற்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்ட போதும் எந்த முடிவும் மாகாணத்தில் இருந்து கிடைக்கவில்லை என வலயத்திணைக்களத்தினர் தெரிவித்துள்ளார்கள்.

இந்த நிலையில் பாடசாலைக்கு அதிபர் நியமிப்பது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளோம் மாணவர்களையோ,ஆசிரியர்களையோ பாடசாலை வளாகத்திற்குள் நுளைய அனுமதிக்காது தொடர் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக கவனயீர்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மாத்தளன் றோமன் கத்தோலிக்க அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் தற்போது 50ற்கும் குறைவான மாணவர்களே கல்வி கற்று வருகின்றார்கள் இந்த நிலையில் கிராமத்தில் உள்ள ஒரோ ஒரு பழமை பொருந்திய பாடசாலையாக இந்த பாடசாலை காணப்படுகின்றது போரிற்கு முன்னர் இந்த பாடசாலையில் 150 வரையான மாணவர்கள் கல்வி கற்று வருவதுடன் இறுதிப்போரின் போது இந்த பாடசாலை காயமடைந்த மக்கள் தஞ்சமடைந்த ஒரு மருத்துவமனையாக இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் அதிபர் நியமனம் கோரி மாணவர்கள் - பெற்றோர்கள் போராட்டம் | Mullaitivu School Principal Issue Protest

இந்த நிலையில் அண்மையில் (கடந்த ஏப்ரல் மாதமளவில்) வடக்கு மாகாணத்தின் 13 கல்வி வலயங்களிலும் உள்ள பாடசாலைகளில் இருந்து 56 பாடசாலைகளை விரைவில் மூடுவதற்குக் கல்வி அமைச்சு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் ஐம்பதுக்கும் குறைந்த மாணவர்கள் கல்வி கற்கும் 266 பாடசாலைகள் உள்ளன என்ற அதிர்ச்சித் தகவலை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 37 பாடசாலைகள் இவ்வாறு காணப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சில பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இவ்வாறு இந்த பாடசாலையினையும் மூடுவதற்கான நடவடிக்கையாகவே இதனை பார்க்கமுடிகின்றது என்றும் எண்ணத் தோன்றுவதாக பலர் தெதரிவிக்கின்றனர். 

முல்லைத்தீவில் அதிபர் நியமனம் கோரி மாணவர்கள் - பெற்றோர்கள் போராட்டம் | Mullaitivu School Principal Issue Protest  

GalleryGalleryGalleryGallery
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

Alvai South, மல்லாகம்

11 Oct, 2009
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கொழும்பு

29 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Kempen, Germany

22 Sep, 2025
மரண அறிவித்தல்

சுருவில், London, United Kingdom

26 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

24 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US