தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்த முல்லைத்தீவு பாடசாலை
தேசிய மட்டத்தில் நடைபெற்ற அகில இலங்கை பரதநாட்டியப் போட்டியில் முல்லைத்தீவு(Mullaitivu) பாடசாலை மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நேற்று (09.11.2024) திருகோணமலையில் நடைபெற்ற தேசிய மட்டல்திலான இப் போட்டிகளில் முல்லைத்தீவு கல்வி வலய பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டு போட்டியிட்டிருந்தனர்.
இப்போட்டியில் வற்றாப்பளை மகா வித்தியாலயத்தின் இரு நாட்டிய நிகழ்ச்சிகள் அகில இலங்கை மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளன.
கிடைத்த முதலிடம்
கொற்றவையாடல், மல்லாடல் ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளும் பாடசாலையின் முயற்சிக்கு கிடைத்த பரிசாக தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளன.

இவ்வெற்றியை பெற்றுக்கொள்ள மாணவர்களை பயிற்றுவித்த, ஆசிரியை ஜஸ்மினி சிவகுமாரனுக்கு பாடசாலை தமது நன்றிகளையும் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23
பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம் News Lankasri
திடீரென பிக்பாஸ் 10வது சீசனில் என்ட்ரி கொடுத்துள்ள சன் டிவி சீரியல் நடிகை... யார் தெரியுமா? Cineulagam