முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி என்னை பழிவாங்க முயற்சிக்கின்றார்! மரியசுரேஸ் ஈஸ்வரி

Sri Lanka Police Mullaitivu Sri Lankan political crisis
By Thulsi Feb 11, 2023 09:07 AM GMT
Report

முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி தன்னை திட்டமிட்டு பழிவாங்குவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.

தனது இயலாத மகனை திட்டமிட்டு கைது செய்து தன்னை பழிவாங்க முற்படுவதோடு தன்னை போராட்டங்களில் ஈடுபடுவதை தடுக்க முனைவதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி என்னை பழிவாங்க முயற்சிக்கின்றார்! மரியசுரேஸ் ஈஸ்வரி | Mullaitivu Police Officer Taking Revenge Complain

 பொலிஸாரின் திட்டமிட்ட செயல்

இலங்கையினுடைய 75 வது சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக தெரிவித்து தமிழ் இனத்தின் மீதான அடக்குமுறையை நிறுத்த கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி என்ற போராட்டம் இடம்பெற்றுள்ளது.

கடந்த 6 ஆம் திகதி திருகோணமலையில் அவர் பேரணியில் சென்று கொண்டிருந்த போது அவருடைய மகன் வீடு ஒன்றை உடைத்து வீட்டினுள் களவாட சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகனை தேடி தனது வீடு புகுந்து பொலிஸார் தேடிவருவதாக தெரிவிக்கப்பட்ட தகவலை அடுத்து அவர் போராட்டத்தில் இருந்து முல்லைதீவுக்கு வருகை தந்துள்ளார்.

தனது இரண்டாவது மகன் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவராக காணப்படுவதோடு, அவர் வேறு நபர்களின் தூண்டுதல்களுக்கு உள்ளாக கூடிய நிலைமை இருக்கின்ற வகையிலே தான் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமயம் பார்த்து வீட்டில் நான் இல்லை என அறிந்து அரச புலனாய்வாளர்கள் மற்றும் பொலிஸாரின் திட்டமிட்ட செயற்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி என்னை பழிவாங்க முயற்சிக்கின்றார்! மரியசுரேஸ் ஈஸ்வரி | Mullaitivu Police Officer Taking Revenge Complain

திட்டமிட்ட  செயலாக அவருக்கு போதைப்பொருள் அல்லது வேறு ஏதேனும் கொடுத்து அருகில் இருந்த வீடு ஒன்றுக்குள் செல்லுமாறு பணித்து வீடு பூந்து களவு எடுத்த வகையில் ஒரு வழக்கை தொடர்வதற்காக திட்டமிட்டு முல்லைத்தீவு பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக மரிய சுரேஷ் ஈஸ்வரி குற்றம் சுமத்தியுள்ளார்.

தன்னுடைய வீட்டுக்கு அருகில் உள்ள வீடு ஒன்றிக்குள் தன்னுடைய மகன் அத்து மீறி நுழைந்ததாக தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் அந்த வீட்டுக்காரர் முறைப்பாடு செய்ததாக தெரிவித்து மகனை காணவில்லை எனவும் மகனை தேடுவதாக தெரிவித்து நான் வீட்டில் இல்லாத நேரம் 15 வரையான பொலிஸார் தனது வீட்டுக்கு வந்து வீட்டிலிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினுடைய விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும் பார்வையிட்டு சோதனையிட்டுள்ளனர்.

போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம்

இவரை பல்வேறு தடவைகள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என பொலிஸார் எச்சரித்திருந்ததும் அதனை மீறி தான் போராட்டத்தில் ஈடுபட்டதை பழிவாங்கும் நிலையிலே பொலிஸார் புலனாய்வாளர்கள் இணைந்து திட்டமிட்டு குறித்த செயற்பாட்டை நிறைவேற்றியுள்ளதாக மரிய சுரேஷ்வரி குற்றம் சுமத்தியுள்ளார் .

குறிப்பாக வடக்கு கிழக்கிலே இடம்பெறுகின்ற பல்வேறு போராட்டங்களில் தான் கலந்து கொள்கின்ற போது தன்னை போராட்டங்களில் கலந்து கொள்ளாமல் தடுப்பதற்காக முல்லைத்தீவு பொலிஸார் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டதாகவும் அவை அனைத்தையும் மீறி தான் அந்த விடயங்களில் முன்னெடுத்துச் செல்வதால் தன்னை பழிவாங்கும் நோக்கத்தில் தொடர்ச்சியாக பொலிஸார் செயற்பட்டு வந்ததாகவும் தான் இல்லாத நேரம் பார்த்து இவ்வாறான ஒரு செயற்பாட்டை செய்துள்ளார்கள்.

இவ்வாறான நிலையில் மகன் அந்த சம்பவத்தை தொடர்ந்து தலைமறைவாகியிருந்த நிலைமையிலே மகன் யாழ்ப்பாணத்தில் உள்ள அவருடைய உறவினர்களின் வீட்டுக்கு சென்ற நிலையில் மகனை இன்று காலை முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் அழைத்து வந்தேன்.

முறைப்பாடு செய்ததாக தெரிவித்த வீட்டில் உரிமையாளர்களும் இது ஒரு பிரச்சனை இல்லை எனவும் மகனை காணவில்லை ஏதாவது செய்தாலும் என்ற பயத்தினாலேயே தாம் பொலிஸ் தெரிவித்ததாகவும் அதை சமரசமாக முடிப்பதாகவும் தெரிவித்தும் இன்று காலையில் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற தன்னுடைய மகனை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்த உள்ளதாக தெரிவித்திருக்கின்றனர்.

நீதிமன்றில் முன்னிலை

குறிப்பாக காலை வேளையிலே (8.40) மகனை கைது செய்திருந்த போதும் மாலை 3 மணி வரை கைது செய்தமைக்காக வழங்கப்படும் பத்திரத்தை கூட பொலிஸார் வழங்கவில்லை.

தான் சண்டையிட்டு அந்த பத்திரத்தை பெற்றுக் கொண்டதாகவும் தன்னை பழி வாங்குவதற்காகவே திட்டமிட்டு பொலிஸார் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் காலையில் மகன் பொலிஸ் நிலையம் சென்றும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாது நாளை வரை பொலிசில் தடுத்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தொடர்ச்சியாக நீங்கள் போராட்டங்களுக்கு நிதிகளுக்காக செல்கின்றீர்கள் உங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வருகின்றது என பல்வேறு வகைகளில் தன்னை தொடர்ச்சியாக அச்சுறுத்தி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி என்னை பழிவாங்க முயற்சிக்கின்றார்! மரியசுரேஸ் ஈஸ்வரி | Mullaitivu Police Officer Taking Revenge Complain

இன்றைய நிலையில் இவ்வாறு திட்டமிட்டு செய்திருக்கின்ற நிலைமையில் இவர்களுடைய இந்த செயற்பாடு தொடர்பில் அதிருப்தி வெளியிட்டதோடு தாங்கள் ஏதாவது தற்கொலை முயற்சிகள் செய்தால் கூட இவர்களுடைய அழுத்தங்களும் இவருடைய தாக்கத்தினாலே தாங்கள் இந்த முடிவை எடுக்க நேரிடும்.

எனவே சம்பந்தப்பட்ட மனித உரிமை சார்ந்த மற்றும் இலங்கையில் உள்ள தூதரகங்கள் அனைவரையும் இந்த விடயத்தில் உடனடியாக தொடர்பு கொண்டு தனக்கு நீதி பெற்று தர நடவடிக்கை எடுக்குமாறும் தன்னுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளார் குறித்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் முறைப்பாடு ஒன்றினை அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US