முத்தையன்கட்டு இளைஞனின் மரண விவகாரம்.. நீதிமன்றின் உத்தரவு
முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை இன்றையதினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு - முத்தையன்கட்டு பகுதியில் மர்மமான முறையில் குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை இன்றையதினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு தொடர்பாக மூன்று இராணுவத்தினர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் நேற்றைய தினமும் (18) சந்தேகத்தின் பேரில் இராணுவம் ஒருவர் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
தொடர் விளக்கமறியல்
இந்நிலையில், சந்தேக நபர் நால்வரும் இன்றையதினம் (19) முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு இருந்தனர்.
அணிவகுப்புடன் ஆரம்பமான குறித்த வழக்கு விசாரணையானது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முல்லைத்தீவு மாவட்ட சட்டதரணிகளான கெங்காதரன், சுபா தனஞ்சயன் மற்றும் ஏனைய சடட்டத்தரணி குழுவினர் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்திற்கு பிணை வழங்க கூடாது என வாதிட்டிருந்தனர்.
அதனை தொடர்ந்து சந்தேக நபர் நால்வரையும் 26.08.2025 வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தவிட்டிருந்தார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








