காதலியார் சம்மளங்குளத்தில் விவசாயப்பாதை சீரின்மையால் அவதியுறும் விவசாயிகள்
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் கமநலசேவைநிலையப் பிரிவிற்குட்பட்ட, காதலியார் சம்மளம்குளம் பகுதியிலுள்ள வயல்நிலங்களுக்குச் செல்லும் 03 கிலோமீற்றர் தூரமான குருவிச்சை ஆற்றுப்பால வீதியானது சீரின்றி காணப்படுவதால் அப்பகுதி விவசாயிகள் பெருத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதி விவசாயிகளின் அழைப்பையேற்று வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்றையதினம் (20) குறித்த பகுதிக்கு நேரடியாகச்சென்று நிலைமைகளைப் பார்வையிட்டார்.
குறிப்பாக 03 கிலோமீற்றர் தூரமான இவ்வீதி மிகமோசமாகப் பாதிக்கப்பட்டு காணப்படுவதால், இப்பகுதியில் 300 ஏக்கர் வரையிலான விவசாயநிலங்களில் நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள் விவசாயத்திற்கான உள்ளீடுகளை எடுத்துச்செல்வதிலும், அறுவடைக்காலத்தில் அறுவடையை எடுத்துச்செல்வதிலும் பலத்த இடர்பாடுகளுக்குள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மிகமோசமான சேதம்
அத்தோடு குறித்த பகுதியில் அமைந்துள்ள குருவிச்சை ஆற்றுப்பாலமும் கடந்தகாலத்தில் மிகமோசமாக சேதமடைந்திருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், வடக்குமாகாண சபை உறுப்பினராக இருந்த காலத்தில் அவருடைய முயற்சியல் அந்தப்பாலம் புதிகாக அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அப்பாலத்தினைப் புதிதாக அமைத்துத் தந்ததைப்போல, அதனோடு இணைந்த 03 கிலோமீற்றர் தூரமான வீதியைும் சீரமைத்துத் தருமாறு விவசாயிகளால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
குறித்த வீதிச் சீரமைப்புத் தொடர்பில் எழுத்துமூலமான கோரிக்கையினைத் தம்மிடம் கையளிக்குமாறும், தாம் இவ்வீதிச் சீரமைப்புத்தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த களவிஜயத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுடன் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இராசரத்தினம் கிரிதரனும் கலந்துகொண்டிருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 12 மணி நேரம் முன்

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி... அமெரிக்காவின் சக்திவாய்ந்த வெடிகுண்டுக்கு எதிரி நாடு ஒன்றால் சிக்கல் News Lankasri
