முல்லைத்தீவில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை
முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியில் கஞ்சா வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சட்டவிரோதமாக கசிப்புக்காய்ச்சி விற்பனை செய்யும் இடம் ஒன்றும் முற்றுகை இடப்பட்டுள்ளது.
பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய நேற்று(20.12.2023) குறித்த இடத்தை முற்றுகை இடப்பட்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது.
நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்கள்.
போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து முன்னெடுத்து வருகின்றார்கள்.
பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் இந்த நடவடிக்கையில் 9 பரல்கள் மற்றும் கசிப்பு காய்ச்சி பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பன இதன்போது மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட சான்று பொருட்களை மாவட்ட நீதிமன்றத்தில் கையளிக்கும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam
