முல்லைத்தீவில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை
முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியில் கஞ்சா வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சட்டவிரோதமாக கசிப்புக்காய்ச்சி விற்பனை செய்யும் இடம் ஒன்றும் முற்றுகை இடப்பட்டுள்ளது.
பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய நேற்று(20.12.2023) குறித்த இடத்தை முற்றுகை இடப்பட்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது.
நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்கள்.
போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து முன்னெடுத்து வருகின்றார்கள்.

பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் இந்த நடவடிக்கையில் 9 பரல்கள் மற்றும் கசிப்பு காய்ச்சி பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பன இதன்போது மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட சான்று பொருட்களை மாவட்ட நீதிமன்றத்தில் கையளிக்கும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan