மீண்டுமொருமுறை முள்ளிவாய்க்கால் கஞ்சிகுடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மக்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாளாந்தம் வேலை செய்து அன்றாட ஜீவனோபாயத்தை கொண்டு செல்லும் குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கோவிட் தொற்றுநோய் தாக்கத்தின் அபாயம் தொடர்கின்ற நிலையில் தொடர்ந்தும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கரைதுறைபற்று, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, மாந்தை மேற்கு, வெலியோய உள்ளிட்ட பிரதேச செயலகங்களின் கீழ் வாழும் ஏழைக் குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியை சந்த்தித்துள்ளனர்.
குறிப்பாக முள்ளிவாய்க்கால் பகுதியில் மீண்டும் ஒருமுறை முள்ளிவாய்க்கால் கஞ்சிகுடிக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.