புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை முன்பாக பதற்றம்! பொலிஸார் பாதுகாப்பு கடமையில்
புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலைக்கு முன்பாக கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
குருணாகல் – அனுராதபுரம் பிரதான வீதியின் தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆடைத்தொழிற்சாலை வான் ஒன்றும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி இன்று காலை விபத்துக்குள்ளானது.
பதற்ற நிலை
இந்தநிலையில் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையின் முன்பாக தற்போது விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்று கூடியுள்ளதனால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்த நிலையில், விபத்தில் மேலும், மூவர் காயமடைந்துள்ளனர். அவர்கள் தற்சமயம் சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையின் முன்பாக தற்போது உறவினர்கள் ஒன்று கூடியுள்ள நிலையில் ஆடைத்தொழிற்சாலை பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டு பணியாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
ஆடைத்தொழிற்சாலையின் முன்பாக புதுக்குடியிருப்பு பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது.













அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
