போராட்டத்தில் கலந்து கொண்ட முஜிபுர் ரஹ்மானுக்கு திடீர் சுகயீனம்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு போராட்டம்
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின்ர் கொழும்பில் இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நிலையில் முஜிபுர் ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர் புகை பிரயோகத்தினால் சுவாசப் பாதிப்பு ஏற்பட்ட நிலையிலேயே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri
