ஆளுங்கட்சி சட்டத்தை மதித்து நடக்க கற்றுக் கொள்ள வேண்டும்! முஜிபுர் ரஹ்மான்
ஆளுங்கட்சியினர் முதலில் சட்டத்தை மதித்து நடக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட முஜிபுர் ரஹ்மான் எம்.பி, உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் சட்டத்தில் தெளிவான விளக்கங்கள் உள்ளன.
ஆட்சியமைக்கும் சபைகள்
அவ்வாறான நிலையில், உள்ளூராட்சி மன்றங்களில் பெரும்பான்மையை தேடிக் கொள்வதற்கு முன்னதாக அரசாங்கம் அதனை தெளிவாக வாசித்துப் பார்க்க வேண்டும்.

அரசாங்கம் பெரும்பான்மையை பெற்றுள்ள சபைகளில் அவர்கள் ஆட்சியமைக்க நாங்கள் தடையாக இருக்க மாட்டோம். நாங்கள் ஆட்சியமைக்கும் வாய்ப்பைக் கொண்டுள்ள சபைகளில் அவர்கள் முட்டுக்கட்டையாக இருக்க கூடாது.
அதைவிடுத்து யாரும் யாருக்கும் முட்டுக்கட்டை போடவோ, தடைகள் போடவோ வழியில்லாத நிலையில் சட்டத்தில் எல்லாம் தெளிவாக உள்ளது.

ஆளுங்கட்சி முதலில் அதனைப் படித்து சட்டத்தை மதித்து நடக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
ஒவ்வொரு நாளும் முரண்பாடான பேச்சு- ஈரான் போரில் ட்ரம்ப் நிலைப்பாட்டை விமர்சித்த மேக்ரான் News Lankasri