மகிந்த உலங்கு வானூர்தியில் வரவில்லை! விரைவில் உரையாற்றுவார்
நாடாளுமன்றுக்கு நேற்று மகிந்த ராஜபக்ச, உலங்கு வானூர்தியில் அழைத்துச் செல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அலுவலகம் இன்று நிராகரித்துள்ளது.
ராஜபக்சவின் முன்னாள் ஒருங்கிணைப்பு செயலாளர் கீதாநாத் காசிலிங்கம், இந்த தகவலை மறுத்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச, கொழும்பில் இருப்பதாகவும், வீதியூடாகவே அவர் நாடாளுமன்றத்துக்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுடன் அவர் தொடர்ந்தும் அமர்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.
அத்துடன் , விரைவில் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றில் உரையாற்றுவார் என்று கீதாநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.