வாகன இறக்குமதி தொடர்பில் சபாநாயகருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை
வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பத்திரம் வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களால் சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற செயற்குழுக் கூட்டத்தின் போது இந்த விடயம் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தீர்வையற்ற வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்க முடியாவிட்டால் பெறுமதி குறைந்த வாகனமொன்றை இறக்குமதி செய்வதற்கேனும் அனுமதி வழங்குமாறு கோரியுள்ளனர்.
தேர்தல் நடவடிக்கை
எதிர்வரும் தேர்தல்களின் போது வாகனமொன்று இன்றி பிரச்சாரப் பணிகளில் ஈடுபடுவது மிகுந்த சவால் மிக்கது என தெரிவித்துள்ளனர்.
எந்தவொரு வாகனமும் இன்றி புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நாடாளுமன்றினை பிரதிநிதித்துவம் செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கடந்த 2015ம் ஆண்டின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 10 மணி நேரம் முன்

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam
