முதலமைச்சர் வேட்பாளர்களாக போட்டியிட தயாராகும் ஐ. மக்கள் சக்தியின் எம்.பிக்கள்
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் அனைத்து மாகாணங்களுக்குமான முதலமைச்சர் வேட்பாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களை நிறுத்த ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
இதற்கு அமைய வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட நளின் பண்டாரவும்(Nalin Bandara), மத்திய மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட மயந்த திஸாநாயக்க(Mayantha Dissanayakke) இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனியான கூட்டணியாக எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுமாயின் தான் வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதாக தயாசிறி ஜயசேகர(Dayasiri Jayasekara) ஆரம்பத்திலேயே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri