அரசுக்குள் பிளவு? - அளும் கட்சியிலிருந்து விலக தயாராகும் எம்.பி
அரசாங்க கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அடுத்த சில வாரங்களில் ஒரு சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக எதிர்க்கட்சியில் அமர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான வாய்ப்பு உள்ளதாக கொழும்பின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் விரிசல் தொடர்ந்து விரிவடைந்து வருவதை அடுத்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.
பசில் ராஜபக்r நாடாளுமன்றத்தில் பிரவேசித்தமைக்கும் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கும் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன.
அத்துடன் எரிபொருள் விலை உயர்வு மற்றும் ஏனைய விடயங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை பிளவு ஏற்படுவதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கொழும்பின் ஊடகம் தெரிவித்துள்ளது.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 5 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri