கொழும்பின் புறநகர் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து கொள்ளையன் அட்டகாசம்
கொழும்பு புறநகர் பகுதியில் வீடொன்றில் கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 14ஆம் திகதி கல்கிஸ்ஸ பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் நேற்றையதினம் இரத்மலானையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பொருட்கள் கொள்ளை
கைது செய்யப்பட்டவர் இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவராவார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர், இரத்மலானை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடமிருந்து போதைப்பொருள் உட்பட பல்வேறு பொருட்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri