யாழில் பட்டப்பகலில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்
யாழ்ப்பாணம் 5ஆம் குறுக்குத்தெரு பகுதியில் வீதியின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(11.1.2026) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நேற்றையதினம் கட்டைக்காட்டை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் யாழ்ப்பாணத்திற்கு அவசர தேவை நிமிர்த்தம் BHU 3878 இலக்கமுடைய pulser ரக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
மேலதிக விசாரணை
இதன்போது, யாழ்ப்பாணம் 5ஆம் குறுக்குத்தெரு பகுதியில் வீதியின் ஓரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பொருட்களை அருகில் உள்ள கடையில் கொள்வனவு செய்துள்ளார்.
ஒரு சில நிமிடங்களின் பின்பு திரும்பி வந்து மோட்டார் சைக்கிளை பார்த்த போது குறித்த இடத்தில் மோட்டார் சைக்கிள் இருக்கவில்லை.

மோட்டார் சைக்கிள் களவு போனதை அறிந்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் குடும்பஸ்தரால் முறைப்பாடளிக்கப்பட்டது.
அதன் பிரகாரம் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam