யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோட்டார்சைக்கிள் மோதி விபத்து - ஒருவர் படுகாயம்
வவுனியா - திருநாவற்குளம் பகுதியில் புகையிரதத்துடன் மோட்டார்சைக்கிள் மோதி விபத்திற்கு இலக்காகியதில் சாரதி படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா விவசாய கல்லூரிக்கு முன்பாக அமைந்துள்ள திருநாவற்குளம் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இன்று காலை 6.50 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திருநாவற்குளம் புகையிரத கடவையினை மோட்டார்சைக்கிளில் நபர் ஒருவர் கடக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்துடன் மோட்டார்சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் மோட்டார்சைக்கிள் சேதமடைந்துள்ளதுடன் சாரதி படுகாயடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தில் 40 வயதுடைய நிசாகரன் என்ற ஆசிரியரே படுகாயமடைந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புகையிர நிலைய அதிகாரிகளுடன் இணைந்து வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் குறித்த பாதுகாப்பற்ற கடவையில் டிஜிட்டல் தொழிநுட்ப ஒலி சமிச்சை அல்லது பாதுகாப்பு உத்தியோகத்தரை பணியில் ஈடுபடுத்துமாறு அப்பகுதி மக்கள் பல தடவைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam
