கொட்டகலையில் மோட்டார்சைக்கிள் விபத்து: மூவர் படுகாயம்
திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை நகரில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த மூவர் சிகிச்சைகளுக்காக கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொட்டகலை நகரிலிருந்து பத்தனை நோக்கிப் பயணித்த மோட்டார்சைக்கிள் கொட்டகலை வூட்டன் பசாரில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற மோட்டார்சைக்கிளில் மோதியதன் பின் இழுத்துச் செல்லப்பட்டு பாதை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானில் மோதியுள்ளது.
இதனால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் தூக்கி எறியப்பட்டு படுகாயமடைந்துள்ள நிலையில் மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரும் படுகாயங்களுக்கு இலக்காகியுள்ளார்.
மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவரால் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமையே இந்த விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் மோட்டார் சைக்கிள் சுமார் 50 மீற்றர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு வானில் மோதி அதன் அடியில் சென்றுள்ளதால் வானுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டுள்ளதாகவும் திம்புள்ள - பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.












தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan

பாக்கியலட்சுமி, தங்கமகள் சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
