மோட்டார் சைக்கிள் விபத்தில் தாயும், மகனும் பரிதாபமாக பலி
புத்தளம் - மாதம்பையில் இடம்பெற்ற விபத்தில் தாயும், மகனும் உயிரிழந்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் தாயும், மகனும் ஈரட்டக்குளம் பகுதியில் இன்று (15) சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலுள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, பலத்த காயமடைந்த இருவரையும் உடனடியாக சிலாபம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலன்றி இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பெதும் குமாரவின் ஆலோசனையில் போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.