புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிரான பிரேரணை நிறைவேற்றம்!
பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும், தற்போது அரசினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (PSTA) நடைமுறைப்படுத்தக் கூடாது என்றும் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ். வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று(19.02.2026) பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது.
பிரேரணை நிறைவேற்றம்
இதன்போது, தவிசாளரால் பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் தற்போது அரசினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களுக்கு எதிராக பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எதிர்ப்பை தெரிவித்த நிலையில். ஏனைய உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 1 மணி நேரம் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri