ஐந்து பிள்ளைகள் இருந்தும் அநாதரவான தாயின் சோகக்கதை
உள்நாட்டு போர் நிறைவுற்று பத்து வருடங்கள் கடந்திருந்தாலும் அது ஏற்படுத்திய வடு எத்தனை காலம் ஆனாலும் மாறாது. இதற்கு சாட்சியாய் இன்றும் அந்த கொடிய போரில் தங்கள் வாழ்க்கையை தொலைத்த பலர் நம் இடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அந்தவகையில், தன் வாழ்க்கையை தொலைத்து நிற்கும் திம்பிலி மேற்கு , கோம்பாவில் , முல்லைத்தீவைச் சேர்ந்த விவேகானந்தன் லலிதா தனது அன்றாட வாழ்க்கையை பல இன்னல்களுக்கு மத்தியில் முன்னெடுத்துச் செல்கின்றார்.
ஐந்து பிள்ளைகள் இருந்தும் அநாதரவான நிலையில் பல வடுக்களுடன் தனது வாழ்நாளை கழிப்பதற்காக தினந்தோறும் போராட்டக்களத்தில் போராடிக்கொண்டு தான் இருக்கின்றார்.
இப்படி வறுமையில் வாழும் இவரின் துன்பங்களும், துயரங்களும் குறித்து இன்னும் சொல்லப்படாதவை ஏராளம். ஆனால், அவை இன்னமும் திரைக்குப் பின்னால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
இவர் தனது வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஐ.பி.சி தமிழின் 'என் இனமே என் சனமே' என்ற காணொளி ஊடாக இவ்வாறு பகிர்ந்துக் கொண்டுள்ளார். இவருக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் WhatsApp / Viber - +94767776363 / +94212030600
