யாழில் தீக்காயங்களுடன் பெண் ஒருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் – கட்டைக்காடு, முள்ளியானை பகுதியில் எரிகாயங்களுக்குள்ளான 2 பிள்ளைகளின் தாய், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கணவன் அடுப்படியில் பெற்றோல் போத்தலை வைத்துள்ளதாகவும், இதை அறியாமல் தீக்குச்சியை அணைக்காமல் போட்டதால் தீ பற்றியுள்ளதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டைக்காடு, முள்ளியானைச் சேர்ந்த யோகேஸ்வரன் பாலரஞ்சிதா (வயது- 32) என்ற இரண்டு பிள்ளைகளின் தாய் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கடந்த 22ஆம் திகதி எரிகாயங்களுக்கு உள்ளான அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். 5 நாள்கள் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் குறித்த பெண் நேற்று காலை உயிரிழந்தார்.
இதன்போது,இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் இன்று மேற்கொண்டுள்ளார்.
ராஷ்மிகா திருமணத்திற்கு யாரெல்லாம் வராங்க தெரியுமா! கெஸ்டுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன் Cineulagam
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan