மகள் மற்றும் பேரப்பிள்ளையின் தாக்குதலால் பரிதாபமாக உயிரிழந்த தாய்
குருநாகலில் இரண்டு பிள்ளைகளுக்கு இடையேயான சண்டையை தடுக்க முயற்சித்த தாய் துரதிர்ஷ்டவசமாக, பிள்ளைகள் வீசிய கல்லில் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் மகள் மற்றும் பேரன் ஆகியோர் கோகரெல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இப்பாகமுவ பகுதியில் வசித்து வந்த 80 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே நேற்று முன்தினம் கொல்லப்பட்டுள்ளார்.
சண்டைகள் மற்றும் மோதல்கள்
அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்த அந்தப் பெண்ணின் மகளும் மகனும் சிறிது காலமாக ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு கொண்டிருந்தனர், மேலும் அவர்களுக்கு இடையே தொடர்ந்து சண்டைகள் மற்றும் மோதல்கள் இடம்பெற்று வந்துள்ளன.
இந்நிலையில் நேற்று முன்தினம், சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையேயான வாக்குவாதம் சண்டையாக மாறியுள்ளது. இருவரும் ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர்.
இந்த மோதலில் பேரப்பிள்ளைகளும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மோதலைக் கண்ட வயதான தாய், அதனை தடுக்க முயற்சித்துள்ளார்.
மேலும் சகோதரி தனது சகோதரர் மீது வீசிய கல்லால் தாய் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிகிச்சையின் பலனின்றி
முகத்தில் கற் தாக்கப்பட்டதால் மயக்கமடைந்த அவர், சிகிச்சைக்காக குருநாகல் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சையின் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கோகரெல்ல பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து, தாயின் மரணம் தொடர்பாக அவரது மகள் மற்றும் பேரன் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
