கனடா செல்ல இருந்த இளம் தமிழ் பெண்ணின் குடும்பத்தில் மற்றுமொரு சோகம்!
மட்டக்களப்பு - மாங்காட்டில் நஞ்சுத்தன்மை கொண்ட மீனை உட்கொண்டு, அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 54 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாங்காடுகட்டு பிள்ளையார் வீதியை சேர்ந்த தில்லையம்பலம் யூசைமலர் என்பவரே நேற்று(11.06.2023) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நச்சுதன்மை கொண்ட மீன்
குறித்த பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றின் உரிமையாளர் கடந்த வியாழக்கிழமை (08.06.2023) மதிய உணவிற்காக பகுதியிலுள்ள கடற்கரையில் மீன் வாங்க சென்ற நிலையில், அங்கு மீன் முடிந்த நிலையில் கடற்றொழிலாளர்களின் வலையில் சிக்கிய நஞ்சுதன்மை கொண்ட மீனை விட்டுச் சென்றிருந்தனர்.
இந்நிலையில் அதனை எடுத்து வந்து சமைத்து சாப்பிட்ட ஒரு மணித்தியாலயத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 27 வயதுடைய தில்லையம்பலம் புஜேந்தினி, அவரது 3 வயதுடைய மகன் அஸ்வின், அவரது தாயாரான யூசைமலர், சகோதரன் 20 வயதுடைய கிறிஸ்ரின் ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
இந்தநிலையில் 27 வயதுடைய தில்லையம்பலம் புஜேந்தினி உயிரிழந்ததுடன் அவரது மகன் மற்றும் சகோதரன் சிகிச்சை பெற்று வெளியேறியதாக கூறப்பட்டது.
இதேவேளை அவரது தாயார் தொடர்ந்தும் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை (11.06.2023) மாலை 6 மணிக்கு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
You may like this video
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

குட் பேட் அக்லி, தக் லைஃப் படத்தின் மொத்த வசூலை ஒரே நாளில் தாண்டிய குபேரா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
