பிள்ளைகளுக்கு கொவிட் தொற்று ஏற்படும் என்ற அச்சத்தில் ஐந்து பிள்ளைகளின் தாய் தற்கொலை
பிள்ளைகளுக்கு கொவிட் தொற்று ஏற்படும் என்ற அச்சத்தில் ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த பெண் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
73 வயதான ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் தமக்கு கொவிட் தொற்று ஏற்பட்டு அதன் ஊடாக பிள்ளைகளுக்கும் தொற்று ஏற்படலாம் என்ற அச்சத்தினால் இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
வத்தளை - ஹுனுபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
வீட்டுக்கு வெளியே சென்று மெழுகுவர்த்தியைக் கொண்டு உடலுக்கு தீ மூட்டிக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
எவ்வாறெனினும், குறித்த பெண்ணின் சடலம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவருக்கு கொவிட் தொற்று ஏற்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
கொவிட் தொற்று தொடர்பான பீதியினால் இந்தப் பெண் இவ்வாறு உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.