வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற அன்னை பூபதியின் 36 ஆவது நினைவு தினம்
அன்னை பூபதியின் 36 ஆவது நினைவு தினம் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை அலுவலக்தில் இடம்பெற்றது.
இதன் பொழுது ஒரு நிமிட அக வணக்கம் செலுத்தபட்டு பொது சுடரை வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை மகளீர் அணி செயற்பாட்டாளர் பரமானந்தவள்ளி ஏற்றிவைக்க, காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் க.பாலசந்திரன் மலர்மாலையை திருவுருவ படத்திற்கு அணிவித்தார்.
அன்னை பூபதியின் நினைவுரை
தொடர்சியாக நினைவேந்தலில் பங்குபற்றிய அனைவரும் ஈகைசுடரேற்றி அன்னை பூபதியின் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி, அன்னை பூபதியின் நினைவுரைகள் இடம்பெற்றது.

இதன் பொழுது முன்னாள் தவிசாளர் பாலசந்திரன், நாகரஞ்சினி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான ச.ஜெயந்தன் ,நாகராஜா,விஜயன் , வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை செயலாளர் தனுஷ் ,மகளீர் அணி தலைவி ஜெயரஞ்சி ,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 7 மணி நேரம் முன்
வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்
ஈரான் USS ஆபிரகாம் லிங்கனைத் தாக்கியதா..! குற்றச்சாட்டை மறுக்கும் அமெரிக்கா - அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போர்களம்