மகிந்தவின் பெருமளவு பணம் மோசடி! - பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து பெருமளவிலான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யவில்லை என பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் தெரிவித்தார்.
கொழும்பு ஆங்கில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார்.
பிரதமரின் செயலாளராகப் பணியாற்றிய ஒருவர், அரச வங்கியில் பராமரிக்கப்படும் பிரதமரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கை அணுகக்கூடிய ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி மில்லியன் கணக்கான பணத்தை மோசடி செய்ததாக தகவல்கள் வெளியாகியருந்தன.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது அவருக்கு சம்பளம் கிடைத்த கணக்கில் இருந்து ஏடிஎம் அட்டை மூலம் பணம் எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த நபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த ரொஹான் வெலிவிட்ட, இவ்வாறானதொரு சம்பவம் குறித்து பிரதமர் அலுவலகம் அறிந்திருக்கவில்லை. இந்நிலையில், மேற்படி சம்பவம் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் தமக்குத் தெரிந்தபடி தவறானவை.
இதேவேளை, அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது தந்தையின் வங்கிக் கணக்கு தொடர்பான சம்பவம் தொடர்பில் தனக்குத் தெரியாது எனவும் தெரிவித்திருந்தார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுபோன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வரவில்லை, நடக்கவில்லை என்றும், உள்ளூர் நாளிதழில் வந்த செய்திகளைப் பார்த்து தமக்கே தகவல் தெரிவித்ததாகவும் கூறினார்.