14 வயது சிறுமியின் உயிரிழப்புக்கு காரணம் வெளியானது - செய்திகளின் தொகுப்பு
தம்புள்ளையில் பாழடைந்த வீட்டிலிருந்து உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட 14 வயது சிறுமியின் சடலத்திற்கு நேற்று தம்புள்ளை பொது மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றுள்ளன.
சிறுமியின் இறுதிச் சடங்கில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சிறுமியின் உடலுக்கு தம்புள்ளை மாவட்ட பொது மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை நடைபெற்றிருந்தது.
இதன்போது வன்முறைச் செயல் காரணமாக மரணம் நிகழ்ந்தது என்று பிரேத பரிசோதனையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,