குவிந்துள்ள கோவிட் சடலங்கள்! உயர் அதிகாரியொருவர் வெளியிட்ட தகவல் - செய்திகளின் தொகுப்பு
கோவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக அதிகளவிலான சடலங்கள் குவிந்துள்ளதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அநுராதபுரம் பொது மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநகரசபையினால் நிர்வகிக்கப்படும் மின்சார தகனசாலை சில தினங்களாக செயலிழந்துள்ள காரணத்தினாலேயே இந் நிலமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு நாளைக்கு ஆறுக்கு மேற்பட்ட சடலங்கள் அநுராதபுரம் பொது மையானத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்சார தகன சாலையில் தகனம் செய்யப்பட்டு வந்த நிலையிலேயே இந் நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
