விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராகும் இலங்கை - காத்திருக்கும் கடற்படை! செய்திகளின் தொகுப்பு
கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும் கொள்கலன் கப்பலில் இருந்து எண்ணெய் கசிவை எதிர்கொள்ள இலங்கை தயாராகி வருகிறது.
இந்த சூழ்நிலையை சமாளிக்க இந்தியாவின் கடலோர காவல்படை மற்றும் இந்தியாவிலிருந்து வரும் கப்பல்கள் காத்திருப்பதாக இலங்கையின் கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா நேற்று மாலை வெளியிட்ட தகவலின்படி கப்பலின் ஒரு பகுதி தண்ணீருக்கு மேலே இருந்ததாகவும், மீதமுள்ளவை மூழ்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற அபிவிருத்தி, கடலோர பாதுகாப்பு, கழிவுகளை அகற்றுதல் மற்றும் பொது சுகாதாரத் துறை அமைச்சர் நாலக கொடஹேவாவின் தகவல்படி கப்பலின் ஒரு பகுதி கடற்பரப்பில் மோதியபோதும் கப்பல், இலங்கை கடற்கரையிலிருந்து தொலைவில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,