பயணிகள் விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை இன்று முதல் நீக்கம்! செய்திகளின் தொகுப்பு
நாட்டுக்கு வரும் அனைத்து பயணிகள் விமானங்கள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை இன்று முதல் நீக்கப்படுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எனினும், நாட்டுக்குவரும் விமானங்களின் எண்ணிக்கை வரையறுக்கப்படும் என்று விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டீ.வீ.ஜானக்க குறிப்பிட்டுள்ளார்.
ஒரு விமானத்தில் பயணிக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை 75 அல்லது அதற்கு குறைந்த எண்ணிக்கையாகும் என்றும் இராஜாங்க அமைச்சர் டீ.வீ.ஜானக்க கூறியுள்ளார்.
இது குறித்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிக்கையில், இந்தியா மற்றும் வியட்நாம் நாட்டவர்களுக்கு இலங்கைக்கு வர அனுமதி வழங்கப்படாது என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,