பாதுகாப்பற்ற நாடாக இலங்கை! சட்டத்தரணி நாமல் ராஜபக்ச தகவல் - செய்திகளின் தொகுப்பு
பாதுகாப்பற்ற நாடாக இலங்கை மாறிவிட்டதாக சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் உறுப்பினரும் சட்டத்தரணியுமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளின் குற்றங்களை மறைப்பதற்காக இன்று பொலிஸார் கொலையாளிகளாக மாறிவிட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
முன்னாள் சபாநாயகரான கரு ஜயசூரிய தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் நேற்று நடைபெற்றிருந்தது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய சட்டத்தரணி நாமல் ராஜபக்ச, இதுவரை 07 சிறைக்கைதிகள் பொலிஸாரால் வெளியே அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,